Tuesday, 16 November 2021

இடுப்பு வலி போயே போச்சு

*நண்பரின் பதிவிலிருந்து....  (அவசியம் படியுங்கள். அருமையான பதிவு)*
.  
இடுப்பு வலியும்! Centre of Gravity யும்!

இடுப்பு வலிக்கும்(Disc prolapse) Centre of Gravity க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா??  
என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

2014-ஆம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த பொழுது தங்கவே முடியாத இடுப்பு வலி வந்தது தாம்பரத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன்.

அவர்கள் உங்களுக்கு வந்திருப்பது Disc  Prolapse என்னும் வியாதி. முதுகெலும்பில் உள்ள இரண்டு எலும்புகளுக்கு நடுவில் உள்ள சவ்வு பிதுங்கி வெளியே வந்துவிட்டது. இதை சரிசெய்ய வேண்டுமென்றால் ஒரு ஆபரேஷன் செய்து  வெட்டி எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

உண்மையில் வலி தாங்கவே முடியவில்லை. ஏதேதோ செய்தும் வலி சரியாகவில்லை. வலி என்றால் உயிர்போகும் வலி. அது போன்ற வலியை அனுபவித்ததே கிடையாது. பெல்ட் சிகிச்சை எல்லாம் கொடுத்தார்கள். அப்பொழுதும் சரியாகவில்லை.  வலி பொறுக்க முடியாமல் ஆபரேஷன் கூட செய்து விடலாம் என்று நினைத்தேன்.

அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியிலிருந்து UK சென்றே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. வலியுடன் UK பயணம்.

அங்கு Leamington Spa என்னும் ஊரில் வேலை. என்னுடைய கெட்ட நேரம் நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கம்பெனிக்கும் செல்லும் வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டு விட்டது சில காரணங்களுக்காக. தினமும் 3.5 கிலோ மீட்டர் நடந்தே தான் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

உண்மையில் வாழ்க்கையிலேயே அவ்வளவு கஷ்டப்பட்டு நடந்தது கிடையாது. முதல்நாள் நடந்து சென்று கம்பெனிக்கு சென்று விட்டு வந்து படுத்து உறங்கி அடுத்த நாள் எழுந்திருக்கும் பொழுது வலி சிறிது சரியானது போல் தோன்றியது. அடுத்த நாளும் நடந்து சென்றேன் வலி மேலும் குறைந்தது.  இவ்வாறாக ஒரு நான்கு நாட்களில் வலி முற்றிலும் சரியானது.

மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வலி சரியானது மகிழ்ச்சியாக இருந்தாலும் அது எப்படி சரியானது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

இந்தியாவில் இருந்ததற்கும் இங்கிலாந்தில் இருந்ததற்கும் ஒரே ஒரு வித்தியாசம் நான் கம்பெனிக்கு நடந்து சென்றது மட்டுமே.

இணையத்தில் தேடிய பொழுது ஒருவர் தன்னுடைய blog இதில் Centre of Gravity கும் இடுப்பு வலிக்கும் உள்ள தொடர்பை பற்றி பகிர்ந்திருந்தார்.

Centre of Gravity என்பது ஒரு பொருளின் எடை முழுவதும் ஒரு புள்ளியில் குவிந்து இருக்கும். அந்தப் பொருளின் எடையானது அந்தப் CG புள்ளியின் வழியே பூமியை நோக்கி விழும். அந்த எடை என்னும் விசையானது பொருளின் அடித்தளத்தில் விழுந்தால் அந்த பொருள் எந்த பாதிப்பும் இன்றி நிற்கமுடியும்.  அடித்தளத்தை தாண்டி விழுந்தால் அந்த பொருள் கீழே விழுந்துவிடும்.

இதே போன்று ஒரு விதியை கொண்டுதான் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் இன்னும் சாயாமல் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் அதன் எடையானது பைசா நகர கோபுரத்தின் அடித்தளத்தில் விழுகிறது.

எப்பொழுது அதன் எடையானது அதன் அடித்தளத்தை தாண்டி  விழுகிறதோ அந்த கோபுரம் கீழே விழுந்துவிடும்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கூட அப்படித்தான் வேலை செய்கிறது

பஸ்ஸில் நடத்துனரை பார்த்தால் கால்களை அகட்டி வைத்து இருப்பார். ஏனென்றால் எந்த ஒரு நிலையிலும் அவருடைய எடையானது அவரின் பாதத்திற்கு உள்ளே விழுந்து விடும். அதனால் அவர் கீழே விழுவதில்லை.

அதேபோல் நம்முடைய உடம்பில் Centre of Gravity  மாறினால் அது நம் உடம்பை ஒரு பக்கமாகப் பிடித்து எடுக்க ஆரம்பித்துவிடும் அதனால் ஜவ்வு பிதுங்கி வெளியே வருகிறது இதேபோல் Centre of gravity புள்ளி மாறுவதற்கு சில காரணங்கள்  
1. உடல் எடை அதிகரிப்பது  
2. காலை நேராக வைத்து நடக்காமல் சாய்ந்து நடப்பது  
3. சரியான நிலையில் அமராமல் இருப்பது  
4. பேண்ட்டின் பின்புறம் மிகப்பெரிய பர்ஸ் வைப்பது

இதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால் உங்களுடைய செருப்பு அல்லது ஷூ ஒரு பக்கமாக தேய்ந்து இருக்குமானால் உங்களுக்கு இந்த பிரச்சினை வரலாம் என்று அர்த்தம்.

எனக்கு அந்த பிரச்சினை வந்த சமயங்களில் நான் மிகப்பெரிய பர்ஸ் வைத்திருந்தேன் மற்றும் எனக்கு புதிதாக வந்த சாய்வு நாற்காலியில் நேராக அமர முடியாமல் ஒரு சைடாக அமர வேண்டிய நிலை இருந்தது.

அதன்பிறகு பாண்டில் பர்ஸ் வைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். மற்றும் நாற்காலியை மாற்றி விட்டு நேராக அமர ஆரம்பித்தேன். எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் 2 to 3 கிலோ மீட்டர் வாக்கிங் சென்றுவிட்டு வந்தால் எனக்கு அந்த வலி சரியாக ஆரம்பித்தது.

அதன்பிறகு ஒரு இரண்டு மாதங்களுக்கு வலி அடிக்கடி வந்தது. அதன் பிறகு கடந்த ஏழு வருடங்களாக ஒரு சிறு வலியும் கூட வருவதில்லை.

நடக்கும் பொழுது கால்களை நேராக வைத்து மார்ச் பாஸ்ட் செய்வது போல் நடக்க வேண்டும் அப்பொழுதுதான் Centre of Gravity கால்களுக்கு நடுவில் சரியாக விழும். கால்களை அகட்டி வைத்து நடந்தாலும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஒருவேளை சென்னை மருத்துவர்கள் கூறியதுபோல் ஆபரேஷன் செய்திருந்தால் என் முதுகுத்தண்டு நிலைமை இப்பொழுது என்ன??

இடுப்பு வலி வருவதற்கு இந்த அறிவியல் கான்சப்ட் உண்மை என்றால் இது போன்ற சிம்பிளான தீர்வுகளை ஏன் மருத்துவர்கள் கூறக்கூடாது???

இப்பொழுதெல்லாம் நான் பாடம் நடத்தும் பொழுது Centre of Gravity பற்றிய வகுப்பில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். எதிர்கால மருத்துவர்கள் அவர்கள் தானே!

இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை  மருத்துவ நண்பர்கள் கூறலாம்!

Sunday, 14 November 2021

நேர்மை

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நியாயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று. 

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.

அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது. விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.

அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.

உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.

வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி  உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.

Tuesday, 9 November 2021

குளிர்கால மருத்துவம்

*குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்*

Middleage, senior citizens க்கு 
பொதுவாக ஒரு problem வரும்.

*Cramp...*

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு.

*சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.*

அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்.

Cramp வரும் போது, தூக்கத்தில் இருந்தாலும், அலறி அடித்துக் கொண்டு எழுந்து  அழ ஆரம்பித்து விடுவார்கள்.Pain Uncontrollable.

பொதுவாக Evion tablets 10 நாட்கள் சாப்பிட சொல்வார்கள். அப்போதைக்கு சரியாகிவிடும். பின் மீண்டும் வரும்.

ஆயுர்வேதம், வர்மம்  பயின்ற என் நண்பர் ,எளிமையான ஒரு தீர்வு கூறினார்.

வலது பக்கத்தில் Cramp வந்தால், இடது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் அந்த positionலேயே இருங்கள். Cramp சரியாகிவிடும். வந்த சுவடே தெரியாது.

அதே போல இடது பக்கத்தில் Cramp வந்தால் வலது கையை காதோடு ஒட்டி மேலே தூக்குங்கள்.

படுத்திருக்கும் போது வந்தாலும், 
காதை ஒட்டியவாறு கைகளை 
நீட்டுங்கள். சரியாகிவிடும்.

 நண்பர்கள், உறவுகள் பலரும் பயனடைந்தார்கள். நீங்களும் 
முயற்சித்து பார்க்கலாம்.

*Eye Dryness:-*

இதுவும் அப்படித்தான்.வலியும் இருக்கும். காலையில் கண்ணை திறப்பதே சிரமமாக இருக்கும்.

இரவு தூங்கும் போது கண்டிப்பாக Eye drops போட வேண்டும். இல்லாவிடில் தூக்கம் கெடும். காலையில் சிரமம்.

*இதற்கும் ஒரு எளிய மருத்துவம்:-*

இரவு தூங்கும் போது தொப்புளை சுற்றி அரை அங்குலம் வரை தேங்காய் எண்ணையை தடவி, லேசாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திலேயே, Eye drynessல் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும். இன்னும் சில
உடல் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எனக்கு தெரிந்தவர்
பத்து வருடங்களாக, Eye drops உபயோகித்தவர். அடிக்கடி Eye Checkup.

இப்போது பெரிய Relief. முதலில்  இந்த சிகிச்சையை  சொன்னபோது சிரித்தார்கள் உபயோகப்படுத்தியவுடன், நல்ல முன்னேற்றம்.
Eye drops மிகவும் குறைத்து விட்டார். 
No more doctor Visit.

தூக்கமின்மை :

பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வராது. Disturbed sleep due to worries,  etc etc.

*எளிய மருத்துவம் :-*

தூங்க போகுமுன்,  தேங்காய் எண்ணெய் மூன்று அல்லது நான்கு drops எடுத்து. வலது பாதத்திற்கு அடிபாகத்தில் (உள்ளங்காலில்) மென்மையாக தடவி மூன்று நிமிடம் லேசாக மஸாஜ் செய்யுங்கள். அதே போல இடது காலிலும் செய்யுங்கள். பின் படுத்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக வரும். 

நீங்களும் முயன்று பார்க்கலாம்.
Sleeping tablets கூட நாளடைவில்
தவிர்த்து விடலாம்.

ஒரு மருத்துவ நண்பர் சொன்னது:

தொப்புள்  72000 நரம்புகள் குவியும் இடம்.
அங்கு தேங்காய் எண்ணயை தடவும் போது, நரம்புகளில் இருக்கும் குறைபாடுகளை சமன் செய்கிறது. அதே போலதான், உள்ளங்காலிலும். 

Acupressure பயிற்சிகளில் கூட உள்ளங்கால் முழுமையும் விரல்களால் அழுத்தி, உடலின் எல்லா உறுப்புகளிலும் உயிர் சக்தி தங்கு தடையில்லாம பயணிக்க செய்வார்கள்.

*உடல் நலத்தில் கவனம் தேவை.*

ஆங்கில மருந்துகளை மெல்லகுறைத்து கொண்டு மாற்று மருத்துவத்தில் கவனம் செலுத்துதல் சிறப்பு.

Monday, 8 November 2021

மீன்பிடிக்க கற்றுக்கொடு

*நல்ல கதை ஒன்று* 
 *படியுங்கள்* 

முன்னொரு காலத்தில் நல்ல குணமும் ஒழுக்கமும் நிறைந்த மனிதன் ஒருவன், தன் மனைவி குழந்தைகளோடு புனித யாத்திரை மேற்கொண்டார்.  பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.   புனித யாத்திரையை அவர் மேற்கொண்ட காலமோ,  கடுமையான கோடை காலம் ஆகும்.  
பல மைல்கள் தூரம் கடந்த பிறகு,  அவர்கள் கொண்டு வந்து இருந்த தண்ணீரும் காலியாகி விட்டது.   குடும்பமே தண்ணீர் தாகத்தால் வருந்தியது.  கடுங்கோடை என்பதால்  வழியில் எங்குமே தண்ணீர் இல்லை.   குழந்தைகள் தாகத்தால் தவித்தனர்.  இந்த மனிதனுக்கோ எப்படி இந்த பிரச்சனையைத் தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தார்.   எந்த வழியும் தெரியாமல்,  கடவுளிடம் முறையிட ஆரம்பித்தார்.    கடவுளிடம்,  ஓ பிரபுவே!  தயவு செய்து இந்த சூழ்நிலையை சமாளிக்க நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.  சிறிது நேரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஒரு சந்நியாசி ஓரிடத்தில் உட்கார்ந்து  தியானம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.  அவரிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார்.   சந்நியாசி அவரிடம்,  “இங்கிருந்து ஒரு மைல் தொலைவில் ஒரு சிறிய ஆறு வடக்கு நோக்கி பாய்ந்து செல்கிறது.   நீ அங்கு சென்று,  உங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம்”  என்றார்.    அந்த மனிதன் இதைக்  கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.   சந்நியாசிக்கு நன்றி கூறினான்.
அவனது மனைவியாலோ  அல்லது குழந்தைகளாலோ  இனிமேல்  ஒரு அடி கூட  நடக்க முடியாத நிலையில் இருந்தனர்.  அவர்களை அங்கேயே இருக்க வைத்து விட்டு, அந்த மனிதன் தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.  தண்ணீரை எடுத்துக் கொண்டு திரும்பி வரும்போது,  அவன் எதிரே ஐந்து பேர்கள் வந்தனர்.   அவர்களும் கடுமையான தாகத்தால், தவித்த படி இருந்தனர்.    அந்த மோசமான நிலையில்,  அவர்களைப் பார்த்த, அந்த நல்ல மனிதன் தான் கொண்டு வந்த தண்ணீர் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டு  மீண்டும் ஆற்றுக்கு சென்றான்.
இரண்டாவது முறையாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் போது,  திரும்பவும் தாகத்தால் தவிக்கும் சில பேரை பார்க்கிறான்.   திரும்பவும் தண்ணீரைக் கொடுத்து விடுகிறான்.   மூன்றாவது முறையாக தண்ணீரை எடுத்துக் கொண்டு  தன் குடும்பத்தினரிடம் வருகிறான்.   மனைவியும்,  குழந்தைகளும் மயக்கம் அடைந்து கீழே விழுந்து கிடக்கின்றனர்.   உணர்விழந்த நிலையில் கிடக்கும் அவர்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பிப் பார்க்கிறான்.   அவர்கள் விழிக்கவே இல்லை.  
அவன் அழுது கொண்டே,  அந்த சந்நியாசியிடம் ஓடிச் சென்று,  அவர் பாதங்களில் விழுந்து கதறுகிறான்.  “நான் என்ன பாவம் செய்தேன்?  என் குடும்பம், இந்த நிலையில் இருக்கிறதே!  நான் தாகத்தில் தவிக்கும் மற்றவர்களுக்கு உதவிதானே செய்தேன்;  அது ஒரு புனிதமான செயல்தான்;  என் குடும்பத்தினரைக் காப்பாற்றுங்கள்”.
சந்நியாசி அவனைப் பார்த்து,  “ஓ புண்ணிய ஆன்மாவே!  நீ ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை, தாகத்தோடு வந்த  மற்றவர்களுக்குக் கொடுத்து உன் பாத்திரத்தைக் காலிப் பாத்திரம் ஆக்கினாய்.    இதிலிருந்து,  உனக்கு என்ன நன்மை கிடைத்தது?”
அந்த மனிதன்,  “உதவி செய்வதால்  என்ன கிடைக்கும் என்பதை நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்ப்பது இல்லை.   எனக்கு சரி என்று நான் உணர்ந்ததை செய்தேன்.   எந்த சுய நலமான எண்ணமும் எனக்கு இல்லை” என்றான்.  
அதற்கு சந்நியாசி, “ இந்த மாதிரி நீ செய்த நல்ல காரியங்களுக்கும்,  நல்ல கருத்துக்களுக்கும்  என்ன பயன் கிடைத்தது?   நீ உன்னுடைய  கடமையை நிறைவேற்றாமல்,  மற்றவர்களுக்கு உதவி செய்வது எப்படி?  உன்னுடைய மனைவி, குழந்தைகளுக்கு நீ உதவி செய்யாமல் மற்றவர்களுக்கு  உதவி செய்வது எப்படி நன்மை தரும்?  நல்ல செயல்களை செய்வதற்கு நீ  இன்னும் சரியாக கற்க வில்லை.   நான் செய்த மாதிரி, நீ செய்திருக்க வேண்டும்” என்றார். 
எப்படி என்று அந்த மனிதன் ஆவலாகக் கேட்டான்.   அதற்கு சந்நியாசி அவனைப் பார்த்து, “நீ என்னிடம் தாகத்தைத் தணிக்க வழி கேட்ட போது, நான் உனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை.  அதற்குப் பதிலாக ஆற்றுக்குச் செல்லும் பாதையை காட்டினேன்.  இது போல் உன்னிடம் தாகமாக வந்தவர்களை நீயும் ஆற்றுக்குச் செல்ல வழி காட்டி இருக்க வேண்டும்.    அவர்களும் ஆற்றில் சென்று தாகத்தைத் தணித்து இருப்பார்கள்.   யாருமே,  மற்றவர்களுக்காக,  தங்கள் பாத்திரங்களை காலியாக்க மாட்டார்கள்.”     இந்த அறிவுரைகளை அவனுக்கு வழங்கி விட்டு,  அவனது குடும்பத்தினர்களுக்கும்  ஆசிகளைக் கொடுத்து விட்டு,  அவர் மறைந்து விட்டார்.
அந்த மனிதன் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டான்.   அவனுக்கு இப்போது எல்லாம் தெளிவாகப் புரிந்து விட்டது.   நம்முடைய பொறுப்புக்களைக் கவனிக்காமல்,  எந்த நல்ல காரியத்தையும் செய்வதில் அர்த்தம் இல்லை என்பதை புரிந்து கொண்டான்.    நமது கடமைகளை நன்கு செய்து  அதன் மூலம்  மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருந்து,  நல்ல வழிமுறையையும்  அவர்களுக்குக் காட்ட வேண்டும்.   விவேகத்தோடு  நாம் உதவி செய்ய வேண்டும்.   கடவுளின் பாதையையும்,  உண்மையின் வழியையும்  மற்றவர்களுக்குக் காட்டுவதே  மிகச் சிறந்தது.
 கருத்தை உள்வாங்கி,புரிந்து நடப்போம்.

பயன் கருதாத உதவி

சென்னை பெருங்களத்தூர்.
மாலை நேரத்தை விழுங்கி இரவு மெல்ல தலை நீட்டத் தொடங்கி இருந்தது.  மப்பும் மந்தாரமுமான மழைக்கால குளிரில் வெளியே தலை நீட்டாமல் நிலவு ,   இருளைப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தது.

விடிந்தால் தீபாவளி.  ஊருக்குச் செல்வதற்காக காத்துக் கிடந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பெருங்களத்தூர் பஸ்நிலையம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. 

பஸ்நிலையத்திற்கு முன்னூறு நானூறு மீட்டர் முன்னதாகவே ஏரிக்கரையை ஒட்டி ஒரு முஸ்லிம் ,   மலிவான துணிகளை கடையாய் பரப்பி வைத்திருந்தார்.  அவர் கடை வரை பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்  பேரம்பேசி துணிகளை வாங்கிச் சென்றார்கள்.  அரைமணி நேரமாய் அந்த வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர்  மெல்ல அவரிடம் கேட்டார்.

"நானும் அரைமணி நேரமா பாக்குறேன்... நீங்க நூத்தம்பது ரூபா சொல்லி அவங்க நூறு ரூபாய்க்கு கேட்டாக் கூட குடுத்தீங்க.  சரி ... ஆனா கடைசியா ஒருத்தர் நீங்க சொன்ன நூத்தம்பது ரூபாய குடுத்தப்போ நீங்க நூறை மட்டும் எடுத்திட்டு ஐம்பதை திருப்பிக் குடுத்தீங்களே ஏன்? "

"இது ஒரே விலைனு போர்டு போட்ட கடை இல்ல தம்பி.  ஏழைபாலைங்க அவங்க பொருளாதாரத்துக்கு ஏத்தாப்புல வாங்குவாங்க.  அவங்களுக்கு தரம் முக்கியமில்ல.  சொன்ன விலையிலருந்து குறைச்சு வாங்கியே பழக்கப்பட்டவங்க.  எனக்கு நூறு ரூபா பொருளுக்கு பத்து ரூபா கெடச்சாப் போதும்.  அதனாலதான் நூத்தம்பது சொல்லி நூறுக்கு குடுத்திருவேன் .  அவங்களுக்கும் மனசு திருப்தி.  எனக்கும் நியாயமான வருமானம்.  கடைசியா வந்தவர் பேரம் பேசாம குடுத்தார்.  நானும் மனசாட்சியோட திருப்பிக் குடுத்துட்டேன்"

"ஆமா நீங்க எங்க போகணும் தம்பி "

"திருநெல்வேலி போகணும் பாய்"

"இன்னைக்கெல்லாம் பஸ் ஏறிப் போறது செத்துப் பொழைக்கிறதுக்கு சமம். பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க.  ரயில்லயோ பஸ்லயோ ஒரு மாசம் முன்னாலயே ரிசர்வ் பண்ணி இருக்கலாம்ல"

" கார் இருக்கு.  எப்பவும் அதுலதான் ஊருக்குப் போவேன்.   இன்னைக்கு மத்தியானம்தான் காருக்கு அடில போய் சென்சார் ஒயர எலி கடிச்சிருச்சு.  ஒர்ஷாப்ல உடனே ரெடி பண்ண முடியாதுனுட்டாங்க.   அதான் பஸ்ல போலாம்னு பார்த்தா,   ரொம்ப சிரமமாயிரும் போலயே .. "

"கொஞ்சம் லேட்டானா இடம் கிடைக்கும்.  வெயிட் பண்ணுங்க தம்பி"  என்றவர் மணி பார்க்கிறார்.  7.25
என்றது கடிகாரம்.   "அடடா இரவு தொழுகைக்கு நேரமாச்சே.  தம்பி நான் தொழுகைக்கு போய்ட்டு வாரேன்.  உங்களுக்கு பஸ் வர்ற வரைக்கும் பார்த்துக்கிறீங்களா ... பஸ் வந்தா போயிருங்க ,  ஆண்டவன் பாத்துக்குவான்" 

"சரிங்க பாய் "

அவர் தொழுகைக்குப் போய் வருவதற்குள் எண்ணூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்து வைத்திருந்தார்.  நாகர்கோவில் சென்ற இரண்டு ஆம்னி பஸ்களையும் ஒரு அரசு பஸ்ஸையும் தவற விட்டிருந்தார்.

"இந்தாங்க பாய் எண்ணூறு ரூபாய் ...    துணி கேட்டு வந்தவங்களுக்கு நீங்க விக்கிற மாதிரியே குடுத்தேன்"

"மாஷா அல்லாஹ்.... அல்லா உங்களை சுவனவாசி ஆக்கட்டும்.  ஆமா ... உங்களுக்கு ஒரு பஸ்சும் வரலயா "

"வந்துச்சு.  நான்தான் போகல பாய்.  என்னை நம்பி பொறுப்பை குடுத்துட்டு போய் இருக்கீங்க.  அதை அம்போனு விட்டுட்டுப் போயிருந்தா என்னால நிம்மதியா தீபாவளி கொண்டாடி இருக்க முடியாது பாய்"

"நல்லது தம்பி.  இன்னும் பஸ் வந்துகிட்டுதான் இருக்கும்.  கண்டிப்பா சீட் கிடைக்கும்.  ஆமா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க "

"ஒரே பையன்தான்.  ஏழு வயசாகுது"

"ஓ ...."  என்றவர்,  அந்தப் பையனுக்குத் தகுந்தாற்போல்  தன்னிடம் இருந்ததிலேயே விலையுயர்ந்த(!)  ஒரு பென்சில் பேண்ட்டையும் ஒரு டீசர்ட்டையும் ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் கொடுத்தார்.

"இந்தாங்க தம்பி.  உங்க பையனுக்கு என்னோட தீபாவளி பரிசா வச்சுக்குங்க"

"அய்யோ ... வேண்டாம் பாய்.  நீங்க சொன்னதே போதும்.  நான் ஏற்கனவே புதுத் துணி எல்லாருக்கும் எடுத்துட்டேன்."

"பரவால்ல .... நீங்க போடுற அளவு ரிச்சான துணிகள் என்கிட்ட இல்ல.  இருந்திருந்தா குடுத்திருப்பேன்.  பையன் போடாட்டாலும் உங்க வீட்டுப் பக்கம் இருக்கிற ஒரு ஏழைப் பையனுக்கு குடுங்க.  ஆனா நீங்க இதை வாங்கிக்கிட்டாதான் எனக்கு சந்தோசமா இருக்கும்"

"என்னங்க பாய் இப்படி வற்புறுத்துறீங்க"  என்று வாங்கிக் கொண்டார்.  தன் இரண்டு பைகளில் ஒன்றைத் திறந்து துணியை வைத்துக் கொண்டவர்,   அதிலிருந்து பெரிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை வெளியில் எடுத்து ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் நீட்டினார்.

"இந்தாங்க பாய்,   குப்தா ஸ்வீட்ஸ்.  வீட்டுக்கு கொண்டு போங்க."

"குப்தா ஸ்வீட்சா ... ரொம்ப காஸ்ட்லி ஆச்சே.   பிள்ளைக்காக வாங்கி இருப்பீங்க.  நீங்க கொண்டு போங்க தம்பி"

"அப்போ நானும் டிரெஸ்சை திருப்பித் தந்திருவேன்"

"சரிசரி குடுங்க தம்பி"  என்று ஸ்வீட்சை வாங்கி ஒரமாய் வைத்தவர்,  " வோய் கரீம் பாய் ... இங்க என்னவே பண்றீரு"  என்ற குரல் கேட்டு திரும்பினார்.  கடையை ஒட்டி ஓரமாய் நின்றிருந்த காரில்,   ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி சார்லஸ் அமர்ந்திருந்தார்.  பக்கத்து இருக்கையில் அவர் மனைவி.

"தீபாவளி வியாபாரம் பாக்குறேன் வோய்.  பாத்தா தெரியல "

"பத்து வருசம் முன்னால இருந்த அந்த நக்கலும் நையாண்டியும் இன்னும் உம்மை விட்டுப் போகல வோய் .... எப்படி இருந்த மனுசன்.  தாம்பரத்துலயே கொடிகட்டிப் பறந்த ஜவுளிக்கடை முதலாளி.  உன் கடைய ஒட்டி அந்தப் பாலம் மட்டும் வராம இருந்திருந்தா உன் கடையும் இடிஞ்சிருக்காது.  நீயும் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டே.   எல்லாம் நேரம் வோய்"

"முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல சார்லசு.  நடப்பதெல்லாம் நன்மைக்கே.  எல்லாம் அவன் செயல்"  என்று மேலே கையை உயர்த்தினார் பாய்.

*******

அதே நேரம் திருநெல்வேலி செல்பவருக்கு போன் வந்தது.  

"என்னடி சரசு "

"ஏன்னா பஸ் ஏறிட்டேளா"

"இன்னும் இல்ல.   பஸ் ஸ்டேன்ட்லதான் வெயிட் பண்ணின்டிருக்கேன்."

"பட்டுக்கோட்டைலருந்து அத்திம்பேர் குடும்பமெல்லாம் வந்துட்டாங்கோனா.  பத்மநாபன் இன்னும் பஸ்ஸே ஏறலயா.  பணம் போனா பரவாயில்லே.  டாக்சி பிடிச்சுண்டு வரச் சொல்லுனு சொல்றாங்கோ."

"இன்னும் அரைமணிநேரம் வெயிட் பண்ணிட்டு பஸ் கிடைக்கலேனா டாக்சி பிடிச்சுடலாம்னுதான் இருக்கேன்"

"ஏன்னா ... ரகு,   குப்தா ஸ்வீட்லருந்து பலகாரம் கேட்டானே ... வாங்கிட்டேளா "

"அந்தப் பக்கம் போக பொழுதே ஒழியலடி.  அங்க வந்து சாந்தி ஸ்வீட்ஸ்ல வாங்கிடலாம்"

"என்னமோ போங்கோ ... ரகுவை நீங்க சமாளிச்சுண்டா சரி"

""சரி போனை வை.  பஸ் ஏறிட்டு போன் போடுறேன்"

*******

"ஏம்பா சார்லசு ... நாகர்கோயிலுக்கா போற"

"ஆமா வோய்.  தொடர்ச்சியா நாலுநாள் லீவு.  அதான் ஊரைப் பாக்க போய்ட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் "  

"வழில யாரையாவது பிக்கப் பண்றியா"

"அதெல்லாம் இல்ல வோய்.  நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்."

"அப்போ எனக்கு ஒரு உதவி செய்வியா"

"என்ன செய்யணும் ... உன்னை தூக்கிட்டுப் போய் திருநெல்வேலில போடணுமா"  என்று கலகலவென சிரித்தார் சார்லஸ்.

"அட கூவ.  என்னை இல்லடே ... அந்த தம்பிய கூட்டிப்போய் திருநெல்வேலில இறக்கிரணும்"

"அந்த தம்பி யாரு"

"என் நண்பர்தான்"

"எனக்குத் தெரியாம உனக்கு ஒரு நண்பனா வே ... ரொம்ப மாறிட்ட வோய்.  உன் நண்பர்னு சொல்ற.   உன் நண்பர் எனக்கும் நண்பர்தான்.  மூணாம் மனுசன் மாதிரி கேட்டுக்கிட்டு நிக்கிற ... உள்ள ஏத்தி விடும்வோய் ... "

"தம்பி ... இவன் சார்லஸ்.  என் பால்ய நண்பன்.  இவன் நாகர்கோவில் போறான்.  உங்களை திருநெல்வேலில இறக்கிருவான்.  ஏறிப் போங்க தம்பி"

பத்மநாபனுக்கு சட்டென்று முகம் பிரகாசமாகியது.  கையை பிடித்துக் கொண்டார்.  "பேருதவி செஞ்சீங்க பாய்"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.  ஏறுங்க என்ற பாய்,   மறக்காமல் சொன்னார்.... "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தம்பி"

"ரொம்ப தேங்க்ஸ் பாய் "  என்ற பத்மநாபன் காரில் ஏறி அமர்ந்தார்.

"டேய் ... ஆக்கங்கெட்ட கூவ ... மழை வர்ற மாதிரி இருக்கு.  துணியெல்லாம் மூட்டை கட்டிட்டு வீடு போய் சேரு"

"சரிடா ... ரோடெல்லாம் ரஷ்ஷா இருக்கும்.   பத்திரமா பார்த்துப் போ."

அனைவரும் கைகளை ஆட்டிக் கொண்ட பின் கார் மெல்ல ஊர்ந்து போகத் தொடங்கியது.

கரீம் பாய் துணிகளை எல்லாம் பேக் செய்து விட்டு ,  அந்த ஸ்வீட் பாக்ஸை இப்போதுதான் கூர்ந்து கவனிக்கிறார்.  அதன் மேல்பகுதியில் ரோஸ் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று செருகப்பட்டிருந்தது.  கள்ளம் கபடமில்லாமல் காந்தி தாத்தா பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

"யா அல்லாஹ்"  என்று அனிச்சையாய் கார் சென்ற திசையை திரும்பிப் பார்க்கிறார்.  அது பல்லாயிரம் சிவப்பு புள்ளிகளுக்கிடையே கலந்து போயிருந்தது,   மனதால் கலந்து போன இந்த மூன்று மனித(ங்)ர்களைப் போல !!

#அனைவருக்கும்_இனிய_தீபாவளி_நல்வாழ்த்துகள்

அன்பே அம்மா

இந்த பதிவை நிச்சயம் படியுங்கள்..!! 

🗣 (டி என் --சேஷன் இவரை எல்லோரும் அறிவீர்கள்..!!

இவர்  தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது,

 உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு  தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். 

 வழியில், 
நிறைய  குருவிக் கூடுகள் நிறைந்த ஒரு பெரிய 
மாந்தோப்பை அவர்கள் பார்க்க நேர்ந்தது .

 அதைப் பார்த்ததும், 
அங்கு சென்றனர் இருவரும் எல்லா குருவி கூடுகளும் பார்க்க மிக அழகாக இருந்தன.
 
 அந்த அழகில் லயித்து மயங்கிய சேஷனின் மனைவி 
இரண்டு கூடுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.

  அந்த மாந்தோப்பில்  மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 
ஒரு சிறுவனை, 
உடன் வந்த பாதுகாவலர்கள் மூலம்
 அழைத்து வர செய்து , கூடுகளை எடுத்துத் தரக் கோரி, 
அச்சிறுவனுக்கு ₹10/- கொடுப்பதற்கு முன் வந்தார் சேஷனின் மனைவி .
 
 ஆனால் சிறுவனோ தான் கூடுகளை தரமுடியாது நீங்கள் தரும் காசும் வேண்டாம் என  மறுத்துவிட்டான்.
 
   உடனே, சேஷன்  அவனிடம் பேரம் பேசி  ₹50/- தருவதாக கூறி தொகையை உயர்த்தி பார்த்தார் .

 சேஷன் ஒரு பெரிய அதிகாரி என்பதால், அவர் சொன்னதைச் செய்யும்படி உடன் வந்த காவலர்கள்  கூடுகளை எடுத்து தரும்படி சிறுவனை வற்புறுத்தினர்.

சிறுவன் சேஷனையும் அவரது மனைவியையும் பார்த்து அழுது கொண்டே 
    "சாப்ஜி!  நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும்  நான் அவ்வாறு செய்யமாட்டேன்" என்று சொன்னான்.

 சேஷனும் அவர் மனைவியும் சிறுவனையே பார்க்க அவன் அழுது கொண்டே மீண்டும் பேச துவங்கினான்.
  
    "தாய்க் குருவி, தன் குஞ்சுகளுக்கான உணவுகளை தேட  வெளியே சென்றுள்ளது திரும்பி வந்து அவற்றை அங்கே காணவில்லை என்றால் அந்த தாய் குருவி  அழுவாள். 

அதைப் பார்க்க எனக்கு மனம் இல்லை."என்று கூறி கொண்டே விம்மி அழுதான் 
  அவன் கூறியதை கேட்ட சேஷனும் அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர்.

 சேஷன் சொன்னார்!
  "அந்தச் சிறுவனின் முன்னால் நான் பெரிய ஐ.ஏ.எஸ் என்பதெல்லாம் போய் அவன் சொன்னதைக் கேட்டு என் மனம் உருகியது. 

 ஒரு சாதாரண கடுகு விதை போல நான் அவனுக்கு முன்னால் இருந்தேன்.
 அவர்கள் தங்கள் விருப்பத்தைக்
கை விட்டனர்.திரும்பி வந்த பின்னரும், இந்தச் சம்பவம் அவரைக் குற்ற உணர்ச்சியுடன் பல நாட்கள் தொடர்ந்தது என்கிறார் சேஷன்.

 அன்புக்கு அன்பையே கொடுப்போம் சின்ன சின்ன ஜீவனுக்குள்ளும் அன்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நடப்போம்.

 அறிவை கொண்டு அன்பை எடை போட வேண்டாம் அன்புக்கு ஒரு நாளும் அறிவு நிகர் ஆகவே ஆகாது.

 வாழ்க வளமுடன்... 🧚‍♀️🧚‍♀️