Tuesday, 26 November 2024

மாறுவது மனம்

 இறைபக்தி ஒழுக்கத்தைத் தரும். ஒழுக்கம் மற்ற உயர்வை எல்லாம் தரும்.
மனத்தடை அகற்றும் மாமருந்து இறைவன் மீது இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும்.

மனம் சஞ்சலம் அடையும் போது பிரார்த்தனை செய்து அதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாக்க நினைக்கும் சித்தம் சதா நல்லவே சிந்திக்க வேண்டும்.

சித்தம் பழைய வாசனைகளின் தொகுப்பு, அதைச் சுத்தம் செய்யும் முயற்சியைத் தொடங்க வேண்டும். குப்பையின் மேல் நல்விதைகளைத் தூவ நல்மணம் பரப்பும் மலர்ச்சோலை உருவாகும். 

பேரானந்த சூழ்நிலையை உருவாக்க உதவி செய்யும் நல்லெண்ண விதைகளைத் தூவுவோம். தவிர்க்க வேண்டிய மனமாசுக்களை கட்டுப்பாட்டோடு தவிர்ப்போம்.

சுறுசுறுப்பு ஏற்படட்டும். தேவையற்ற சமூக ஊடகப் பொழுதுபோக்கு அகற்றுவோம். கிளர்ச்சியூட்டும் கேளிக்கைகளை அளவோடு ரசிப்போம். மொத்தத்தில் மனதில் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க முயற்சி செய்வோம்.

நல்லுணர்வைத் தரும் மனமும்
நல்லறிவு தரும் புத்தியும்
நல் நினைவு தரும் சித்தமும்
நற்செயல் தரும அஹங்காரமும்
பெற்றிட பிரார்த்திபபோம்.

Monday, 25 November 2024

மருந்து எது?

*எவை மருந்து*
 1. சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது மருந்து.

 2. காலையில் இறைவனை நினைப்பது மருந்து.

 3. யோகா, பிராணாயாமம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மருந்து.

 4. காலை, மாலை நடைப்பயிற்சியும் மருந்தாகும்.

 5. நோன்பு அனைத்து நோய்களுக்கும் மருந்து.

 6. சூரிய ஒளியும் மருந்துதான்.

 7. மட்கா தண்ணீர் குடிப்பதும் ஒரு மருந்து.

 8. கைதட்டலும் மருந்துதான்.

 9. அதிகம் மெல்லுவதும் மருந்துதான்.

 10. உணவைப் போலவே, மெல்லும் நீர் மற்றும் குடிநீரும் ஒரு மருந்து.

 11. உணவுக்குப் பின் வஜ்ராசனத்தில் அமர்வது மருந்தாகும்.

 12. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவும் மருந்தாகும்.

 13. சில சமயங்களில் மௌனமும் மருந்தாகும்.

  14. சிரிப்பும் கேலியும் மருந்து.

 15. மனநிறைவும் மருந்துதான்.

 16. மனமும் உடலும் அமைதியே மருந்து.

 17. நேர்மையும் நேர்மறையும் மருந்து.

 18. தன்னலமற்ற அன்பும் உணர்ச்சியும் கூட மருந்து.

 19. அனைவருக்கும் நல்லது செய்வதும் மருந்தாகும்.

 20. ஒருவருக்கு புண்ணியம் தரும் ஒன்றைச் செய்வது மருந்து.

 21. எல்லோருடனும் சேர்ந்து வாழ்வதே மருந்து.

 22. உண்பதும் குடிப்பதும் குடும்பத்துடன் பழகுவதும் மருந்தாகும்.

 23. உங்களின் ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணம் இல்லாத ஒரு முழுமையான மருத்துவக் கடை.

 24. குளிர்ச்சியாக இருங்கள், பிஸியாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், உற்சாகமாக இருங்கள், இதுவும் மருந்துதான்.

 25. ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்தாகும்.


  இந்த மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்

Thursday, 7 November 2024

சபையினிலே

கூட்டத்தில் இருந்தாலும். தனிமையில் இருந்தாலும் உணர்வு வசமுறா நிலைதான் சிறந்தது.

தனிமை நம்மை நாம் யார் என்பதை அறியச் செய்யும்.

கூட்டத்தில் இருக்கும் போது அதுவும் மற்றவர் நம்மை மதித்துப் பேச அழைக்கும் போது வார்த்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

கூட்டத்தின் கொள்கைக்கேற்ப நம் நிறங்களை மாற்றிக் கொண்டே சென்றால் நாமும் நிறமாறும் உயிரினமாகக் கருதப்படுவோம்.

எந்தச் சூழலிலும் தன் நிலை மாறாச் சமநிலை கொண்டவனே நல்ல தலைவனாக வருவதற்குத் தகுதியுள்ளவன்.

வாய் உறக்கப் பேச வேண்டிய அவசியமில்லை. உண்மை தானாகவே உறக்கப் பேசிக்கொள்ளும். எல்லாக் கேள்விகளுக்கும் உடனே பதில் சொல்லிவிடத் துடிப்பவர்கள் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவர்கள். தெரியாத விசயங்களை முறையாகத் தெரிந்த பின் பேசுவதே சிறப்பு.

செய்தியாளர்கள் மட்டும் கருவிகளோடு இருந்த காலம் மலைபேறிவிட்டது. மக்கள் அனைவரும் அலை அலையாய் அலைபேசியோடு அலைகிறார்கள் என்ற விழிப்புணர்வு தலைவனுக்கு இருக்க வேண்டும்.

சொற்சோர்வு ஏற்படாமல் அறத்தோடு பேசுவது ஒழுக்கம்.