Tuesday, 26 November 2024

மாறுவது மனம்

 இறைபக்தி ஒழுக்கத்தைத் தரும். ஒழுக்கம் மற்ற உயர்வை எல்லாம் தரும்.
மனத்தடை அகற்றும் மாமருந்து இறைவன் மீது இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும்.

மனம் சஞ்சலம் அடையும் போது பிரார்த்தனை செய்து அதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாக்க நினைக்கும் சித்தம் சதா நல்லவே சிந்திக்க வேண்டும்.

சித்தம் பழைய வாசனைகளின் தொகுப்பு, அதைச் சுத்தம் செய்யும் முயற்சியைத் தொடங்க வேண்டும். குப்பையின் மேல் நல்விதைகளைத் தூவ நல்மணம் பரப்பும் மலர்ச்சோலை உருவாகும். 

பேரானந்த சூழ்நிலையை உருவாக்க உதவி செய்யும் நல்லெண்ண விதைகளைத் தூவுவோம். தவிர்க்க வேண்டிய மனமாசுக்களை கட்டுப்பாட்டோடு தவிர்ப்போம்.

சுறுசுறுப்பு ஏற்படட்டும். தேவையற்ற சமூக ஊடகப் பொழுதுபோக்கு அகற்றுவோம். கிளர்ச்சியூட்டும் கேளிக்கைகளை அளவோடு ரசிப்போம். மொத்தத்தில் மனதில் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க முயற்சி செய்வோம்.

நல்லுணர்வைத் தரும் மனமும்
நல்லறிவு தரும் புத்தியும்
நல் நினைவு தரும் சித்தமும்
நற்செயல் தரும அஹங்காரமும்
பெற்றிட பிரார்த்திபபோம்.

No comments: