உங்களுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் உதவி செய்ய முடியாது. சுதந்திர மனம் யாவையும் சாதிக்க வல்லது. நம்முடைய மனதில் மற்றவர்கள் நிரப்பிய செய்திகளும் கருத்துக்களுமே அதிகம் உள்ளன.
90% செய்திகள் கண்கள் வழியாகச் சேமித்து வைத்தவைகளே. நாம் சிறுவர்களாக இருந்த போது இயற்கையை ரசித்தோம் வறுமையில் வாழ்ந்தோம் மக்களைப் படித்தோம். இவை அனைத்தையும் நேரடியாகப் பார்த்தோம்.
இப்பொழுதுள்ள இளைஞர்கள் மொபைலில் மூழ்கி தேவையற்ற அழிவும் தரும் செய்திகளை மூளையில் சேமிக்கிறார்கள். இவர்கள் எத்தகைய சமுதாயத்தை உருவாக்க முடியும். Digital அனுபவங்கள் வாழ்க்கைக்கு உதவுமா?
online ல் ஆறுதல் சொல்லும் தலைமுறையை உருவாக்குகிறோம். பெற்றோர்களுக்கு Swiggy ல் உணவு அனுப்பிவிட்டு இதுதான் அன்பின் உச்சம் என நினைக்கத் தொடங்கும் இளந்தலைமுறை. நேரடி அனுபவங்களை எல்லோரும் தவிர்க்கவே விரும்புகிறோம்.
மனமெனும் குழந்தையை ஒழுங்காகப் பழக்க வேண்டும். மனம் எங்கு செல்கிறதோ சக்தியும் அங்கேயே செல்லும். மனம் ஒரு சுகவாசி. அது எப்போதும் பழகிய விசயங்களையே விரும்பும். மனதிற்கு அன்பாகக் கட்டளையிடு. இல்லையெனில் மனம் கண்டுகொள்ளாது.
மனமெனும் குழந்தை சில சமயங்களில் தேவையற்ற விசயங்களைப் பார்க்கும் கேட்கும். மனமே மூலதனம். தேவையற்ற விசயங்களைப் பிடித்துக் கொண்டு தொங்காதே! இலக்கை மட்டும் மனதிற்குச் சொல் அது எப்படியோ நடத்திக்காட்டும்.
எதையும் பயிற்சிக்கு கொண்டுவராமல் இருந்தால் உயர்ச்சி என்பது கனவாகப் போகும்.
கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் பலிக்காது. மனச்சமநிலையில் சொல்வது பலிக்கும். மனநிம்மதியோடு செய்யும் செயல்களே நல்லனவற்றைக் கொடுக்கும்.
தெளிவான மனம் தான் எல்லோரின் விருப்பம்.