Tuesday, 27 September 2022

அம்மா

மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்து கொண்ட தந்தை மகனிடம் கேட்டார்...
இப்போ இருக்கிற புதிய அம்மாவை உனக்கு பிடித்திருக்கிறதா...
அப்போது மகன் சொன்னான்.
என் அம்மா என்னிடம் பொய் சொல்வார்...
ஆனாலும் இப்போ புதிதாக வந்திருக்கிற அம்மா என்னிடம்
என்னிடம் பொய் சொல்லவில்லை என்றான்.
இதைக் கேட்ட தந்தை 
"உன் அம்மா சொன்ன பொய் என்ன" 
என்று கேட்டார்.

அதற்கு அவன் 
நான் ஏதாவது சேட்டை பண்ணினால் உனக்கு இன்று சாப்பாடு கிடையாது என்று சொல்லிவிட்டு 
எனக்கு பசி எடுத்தவுடன் என்னை தூக்கி மடியில் உட்கார வைத்து பாசத்துடன் ஒவ்வொரு உருண்டையாக ஊட்டி விடுவார்.

ஆனால் தற்போது உள்ள அம்மா நான் சேட்டை பண்ணின போது என்னை அடித்து உனக்கு சோறு கிடையாது என்று சொன்ன வார்த்தையை உண்மையாக இரண்டு நாட்களாக காப்பாற்றிக் கொண்டுள்ளார்" என்றான்.
அவன் சொன்ன வார்த்தையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட அப்பா அவனை உடனடியாக தூக்கி ஓட்டலுக்கு கொண்டுபோய் உணவு வாங்கி கொடுக்கிறார் கண்ணீருடன்.

"அம்மா மட்டுமே அம்மாவுக்கு சமம்"
பூமியில் கண்களால் காணும் உண்மையான தெய்வம் அம்மா.

பார்த்துப் பேசு

*எது நிதர்சனம் ?*

*வாழும் காலத்தே விழிப்புணர்வுடன் வாழ வேண்டும்.பின்னால் வருந்திப் பயன் இல்லை.*

_*திரௌபதிக்கு தனது வயது 80 ஆனது போல இருந்தது...*_

    உடல் ரீதியாக மற்றும் மனரீதியாகவும் கூட
*அஸ்தினாபுரம்* நகரைச் சுற்றி
விதவைகள் அதிகமாக இருந்தனர்.

    ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.

    அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் *அரசி திரௌபதி, அஸ்தினாபுரம் அரண்மனையில்* அசையாமல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பிறகு,

    *ஸ்ரீ கிருஷ்ணர்*
    அறைக்குள் நுழைய,

   *திரௌபதி கிருஷ்ணரைப்* பார்த்ததும் ஓடி வந்து அவனிடம் சரணடைந்தாள்...

    *கிருஷ்ணர்,* அவள் தலையை தடவிக் கொடுக்கிறார்.
அவளோ அழத் தொடங்கினாள்.

     நேரம் மெல்ல நகருகிறது.
   *கிருஷ்ணன்* கேட்டார்.

    *திரௌபதி* 
என்ன நடந்தது?"

    "ஒன்றும் நடக்கவில்லையே *கிருஷ்ணா"*

    *கிருஷ்ணர்:*
 விதி மிகவும் கொடூரமானது
 பாஞ்சாலி..
    நாம் நினைப்பது போல் வேலை செய்யாது!"

    அது அதன் போக்கில் அதனுடைய செயல்களைச் செய்கிறது.

    முடிவுகளையும்  மாற்றுகிறது.

    நீ பழிவாங்க நினைத்தாய், வெற்றி பெற்றாய், திரௌபதி!
    உன் பழிவாங்கல் முடிந்தது...
 *துரியோதனனும், துச்சாதனனும்* மட்டுமல்ல, கௌரவர்கள் அனைவரும் மடிந்துவிட்டனர்.

 நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்!

    திரௌபதி: "சகோதரா,
 என் காயங்களைத் ஆற்ற வந்தீர்களா? அல்லது  அதன்மீது உப்பு தூவ வந்தீர்களா?"

    கிருஷ்ணர்: இல்லை, திரௌபதி  உண்மை நிலையை உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன்.

    எல்லாம் நமது  தொலை நோக்கு பார்வையற்ற செயல்களின் விளைவு என்பதை உணர்த்த வந்தேன்.
   
    திரௌபதி:அதனால் என்ன?
    இந்தப் போருக்கு நான்தான் முழுப் பொறுப்பு கிருஷ்ணா?*

    *கிருஷ்ணர்:* இல்லை, திரௌபதி  நீ மட்டுமே காரணம் என்று
    கருதாதே...

    ஆனால்,

    உன்  செயல்களில், நீ கொஞ்சம் தொலைநோக்கு பார்வையைக் கொண்டு இருந்திருப்பாயேனால், நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டாய்..

    திரௌபதி:  நான் என்ன செய்திருக்க முடியும் கிருஷ்ணா?

கிருஷ்ணர் :  நீ நிறைய செய்திருக்கமுடியும். 

   உனது சுயம்வரம் நடந்தபோது
   *கர்ணனை* அப்படி அவமானப் படுத்தாமல், போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பளித் திருந்தால் ஒருவேளை முடிவு வேறு ஏதாவதாக இருந்திருக்க கூடும்!

    அதற்குப் பிறகு குந்தி உன்னை ஐந்து கணவர்களுக்கு மனைவியாக்கும் படி கட்டளையிட்டதை...

அப்போது ஏற்றுக் கொள்ளா திருந்தாலும் முடிவு வேறுவித மாக இருந்திருக்கும்.

    அதற்கு பிறகு உன் அரண்மனையில் *துரியோதனனை* அவமானப்படுத்தினாய்...

    பார்வையற்றவரின் மகன்கள் குருடர்கள் என்று.

    அவ்வாறு நீ சொல்லா திருந்திருந்தால், நீ மானபங்கப் பட்டிருக்க மாட்டாய்...

    அப்போதும், ஒருவேளை, சூழ்நிலைகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

    நம் வார்த்தைகள் கூட
    விளைவுகளுக்கு பொறுப்பு திரௌபதி...

நீ *பேசுவதற்கு முன் உன் ஒவ்வொரு வார்த்தையையும் எடைபோடுதல் மிகவும் முக்கிய மானது*"...

    இல்லையெனில் அதன் தீய விளைவுகள் உன்னை மட்டு மல்ல, உனது சுற்றுப்புறத் தையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடும்..

 *_பற்களில் விஷமில்லை, ஆனால் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்கும் ஒரே விலங்கு இவ்வுலகில் மனிதன் மட்டுமே...*_ 

    எனவே வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.
    அதாவது, யாருடைய மனதையும் புண்படுத்தாதீர்கள்.!!
 
ஏனென்றால் மகாபாரதம் நமக்குள் மறைந்திருக்கிறது,!!
🙏
 *_இதுவே நிதர்சனம்!_*