Thursday, 7 November 2024

சபையினிலே

கூட்டத்தில் இருந்தாலும். தனிமையில் இருந்தாலும் உணர்வு வசமுறா நிலைதான் சிறந்தது.

தனிமை நம்மை நாம் யார் என்பதை அறியச் செய்யும்.

கூட்டத்தில் இருக்கும் போது அதுவும் மற்றவர் நம்மை மதித்துப் பேச அழைக்கும் போது வார்த்தைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

கூட்டத்தின் கொள்கைக்கேற்ப நம் நிறங்களை மாற்றிக் கொண்டே சென்றால் நாமும் நிறமாறும் உயிரினமாகக் கருதப்படுவோம்.

எந்தச் சூழலிலும் தன் நிலை மாறாச் சமநிலை கொண்டவனே நல்ல தலைவனாக வருவதற்குத் தகுதியுள்ளவன்.

வாய் உறக்கப் பேச வேண்டிய அவசியமில்லை. உண்மை தானாகவே உறக்கப் பேசிக்கொள்ளும். எல்லாக் கேள்விகளுக்கும் உடனே பதில் சொல்லிவிடத் துடிப்பவர்கள் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவர்கள். தெரியாத விசயங்களை முறையாகத் தெரிந்த பின் பேசுவதே சிறப்பு.

செய்தியாளர்கள் மட்டும் கருவிகளோடு இருந்த காலம் மலைபேறிவிட்டது. மக்கள் அனைவரும் அலை அலையாய் அலைபேசியோடு அலைகிறார்கள் என்ற விழிப்புணர்வு தலைவனுக்கு இருக்க வேண்டும்.

சொற்சோர்வு ஏற்படாமல் அறத்தோடு பேசுவது ஒழுக்கம்.

No comments: