தானம் செய்ய வேண்டிய புண்ணிய தினம். தர்மம் செய்ய வேண்டிய நாளில் தங்கம் வாங்குவது பாவம். அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும்
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது நகைக் கடைக்காரர்கள் விதைத்த பொய்யான நம்பிக்கையே ஆகும். அப்படி தங்கம் வாங்க வேண்டும் என்ற தாகம் இருந்தால் அட்சய திருதியை நாளில் கடன் வாங்கி, தங்கம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இப்படி செய்வதால், கடன் வாங்கும் வழக்கம் மேன்மேலும் அதிகரிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம். ஆனால் இந்நாளில் இறைவா உண்டு மகிழ்வாயாக என வேண்டினால் இறைவனே உணவை ஏற்று நம்மை ஆசீர்வதிப்பார் என்பது ஐதீகம்.
பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் என்பது பெரியோர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள், பலமடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒரு வகையில் திரும்ப கிடைக்கும்.
இந்த நாளில், தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.
அட்சய திரிதியை என்னும் நாளில் தங்கம் வாங்கினால் அதன் பின் வரக்கூடிய நாட்களில் செல்வம் கொழிக்கும் என்று கூறி மூட நம்பிக்கையின் பின்னால் சுற்றும் கூட்டம் இப்பொழுதே டோக்கன் வாங்க நகை கடைகளில் அலை மோதுவது கொடுமை. பக்தியின் பெயரால் நடக்கும் மோசடி நாடகம்..
மனைவிக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பவன் மனிதன்!
மனைவியையே தங்கமாக நினைப்பவன் மாமனிதன்!!😊
ஒரு இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படி ஒரு நாள் இருந்ததாக நினைவில் இல்லை.

No comments:
Post a Comment