Monday, 9 October 2017

ஹிட்லர் சொன்னது


முதலாவது உலகப் போரின்போது சிப்பாயாக கூட கலந்து கொள்ள‍ தகுதி யில்லை என புறக்கணிக்கப்பட்ட‍ ஒருவன் இரண்டாவது உலக போரில் தலைமையேற்று உலகநாடுகள் அனைத்தையுமே நடுங்கவைத்த‍வன் யாரென்றால் அவன் தான் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக அப்போது இருந்த ஹிட்லர்…  எதிரி நாடுகளையே கதிகலங்கச் செய்யும் பலவிதமான அதிரடியாக போர் வியூகங் களையும், போர்உத்திகளையும் கையாண்டவர் என்பது உங்களுக்குதெரியும். அந்நேரத்தில் வாழ் வில் வெற்றி  உன் வசம் ஆவதற்கு அந்த ஹிட்லர்  அதாவது வெற்றிக்கு வித்திடும் அதிரடியான பத்து குறிப்புக்களை நமக்கு சொல்லியுள்ளார். இதோ அந்த அதிரடி ஆலோசனைகள்

ஹிட்லரின் அதிரடி ஆலோசனைகள்:
1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்து விடலாம்.
2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
3) ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
4) அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
5) இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால் விடாதே!
6) நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசை கொள்ளாதே!
7) பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக்கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
8) உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தேர்வு செய்தாள்.
9) நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
10) நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

No comments: