Monday, 28 August 2017

அனுபவ மொழிகள்

ஓலை வீடு 
ஓட்டு வீட்டுக்கு ஏங்கும்
ஓட்டு வீடு
மாடி வீட்டுக்கு ஏங்கும்
மாடி வீடு
மாளிகைக்கு ஏங்கும்
அந்த மாளிகையும்
மரணம் வந்தால்
தூங்கும்

நாம் மறக்க வேண்டியதை எப்போதும் நினைக்கிறோம், எப்போதும் நினைக்க வேண்டியதை மறக்கிறோம்..

உலகம் நமக்காக எப்போதும் பதறாது அது அதன் போக்கில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

பெரிய பெரிய துயரங்களுக்கு பின்னும் பசிக்கவே செய்கிறது.

பிரிவின் உன்னதம் தெரியாத உலகமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
உறவுகளின் மகத்துவம் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

மனிதர்களின் மனசாட்சியை தொடுபவன் மட்டுமே நல்ல மனிதனாக இருப்பான்.

தமிழன் தன் மொழியை பண்பாட்டை விட்டுவிட தயங்குவதே இல்லை. அதை பெருமையாக கருதுவது மடமையல்லவா?

நல்ல செயல்களுக்குத் தடையாக இருக்காதே.

மற்றவர்களைப் பற்றிய உன் எண்ணம் உண்மையாக இருக்க வேண்டும். அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் கற்பனையாக நீயாகவே எண்ணிக் கொள்ளாதே. உன்னைப் பற்றியே எப்பொழுதும் அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்று கருதாதே.

உடம்பு நீ ஏறிச் செல்லும் குதிரை அதை நல்ல முறையில் நடத்து. 

ஒருவரைப் பற்றிய புரளியை மற்றவரிடம் சொல்லாதே.

புத்திசாலியாய்த் தோற்றமளிக்க வேண்டி எதையும் செய்யாதே. மூடர் கூட்டத்தில் முதலாளியென்ன தொளிலாளியென்ன...

மெளனத்தின் சிறப்பைக் கற்றுக்கொள்

ஒருவருடைய வேலையை அவரே செய்யும்படி அவர் விருப்பப் படி விட்டு விடு. அவரே உதவி வேண்டும் பொழுது செய்யத் தயாராக இரு.

எதையும், எல்லாவற்றையும் பிரிய தயாராக இரு.

மனிதனால் எதைச் செய்ய முடியுமோ அதை ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியும். வாத்தைப் போல் வாழாதே.

கடந்து போன அனுபவங்களை நினைவுகளை அசை போடாதே. பின் நோக்கினால் நீ நிலைகுலைந்து போவாய்.

உடம்பு கெட்டுப் போனால் உயிர் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும்.

நண்பர் ஒருவர் நாவரட்சியாக இருக்கும் போது மாத்திரை விழுங்கி உள்ளார் அது தொண்டையில் ஒட்டிக் கொண்டதால் உயிரிழந்துவிட்டார். ஆகவே மாத்திரை முழுங்குவதற்கு முன் சிறிது நீர் அருந்திக் கொள்வது நல்லது.
மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நோய்கள் கூடப் பெரிதாகத் தெரிவதில்லை.

No comments: