Sunday, 14 January 2018

நன்றி நாய்களிடம்

நாயைத் தூக்கி நடுமனையில் வைத்தால் காரணமின்றி குளைக்கவே செய்யும் காரியமின்றி ஓடவே செய்யும் கிராமத்துப் பழமொழி நாய்க்கு வேலையில்லை உடகார நேரமில்லை எவ்வளவு பொருத்தம் செக்கு மாட்டுக் கூட்டத்தைக் கண்டால் நாய்க்கு செருக்கு தலைக்கேறும் நிறுத்தாமல் குளைத்து நிம்மதி கொள்ளும் வாலைச் சுருட்டி வழி தவறி வரும் நாய்கண்டால் சொந்தத் தெரு பறிபோய் விடுமோ என்றஞ்சி இறுதி வரை குளைத்து விரட்டும் நாய் கூட விவரமாக நன்றியை மற்ற நாய்களிடம் காட்டுவதில்லை மனிதனாய் ஒருவன் வந்து விட்டால் அவனிடம் மட்டும் மகிழ்ந்து குளைந்திடும் வேட்டுச் சத்தம் கேட்டு விட்டால் வீட்டுக்குள் அடங்கிவிடும் நாய்க்குணம் கொண்டோரும் கவனிக்க

No comments: