தினம் ஒர் சித்தர் வரலாறு.
நந்திதேவர்
பரம்பொருள் சிவபெருமானின் தலையாய சீடர்களில் என்பதில் முதலாமாண்டு நந்திதேவர்.
அதாவது சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோகா முனி ஆகிய எட்டு சீடர்களும் சைவ சமயத்தை பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.
ஆதி சித்தர் நந்திதேவர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான் ,நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப் பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.
அகத்தியர் அருளிய அகத்திய பூரண சூத்திரம் என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிசிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு:
பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.
நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது
சொல்லந்த மானகுரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.
– அகத்தியர்
மிகப் பழங்காலத்தில் இப்போதுள்ள தஞ்சை மாநகரை அடுத்துள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவயோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாருட்சனை என்ற சித்திரவதியும் நல்லறமாம் இல்லறம் நடத்தி வந்தனர். நீண்ட காலமாக அவர்களுக்கு மகப்பேறு கிட்டவில்லை. ஒரு நாள் சப்தரிஷிகளும் அவர்களுடைய ஆசிரமத்திற்கு வந்தனர். சிலாத முனிவர் அவர்களை உணவருந்தி விட்டு செல்லும்படி வேண்டினார். அந்த ரிஷிகள் எழுவரும் “ பிள்ளைகள் இல்லாத வீட்டில் உணவருந்த மாட்டோம் “ என்று கூறிச் சென்று விட்டனர். அதனால் சிலாதர் திருவையாறு திருத்தலத்தில் உள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி பஞ்சாட்சர தவம் செய்து வந்தார். அவரது தவத்திற்கிரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி “ சிலாதரே “, விரைவில் உமக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான்.
மரணமில்லாத அத்திருமகன் எனக்குச் சமமானவன். என்னை தரிசிப்பவர்கள் யாவரும் அவனையும் வழிபடுவார்கள் என்று கூறி மறைந்தார்.
அக்கால முறைப்படி ஒரு சமயம் சிலாதர் யாகம் செய்ய பூமியைத் தோண்டியபோது பூமிக்கு அடியில் இருந்து நவரத்தினம் பதித்த தங்க பெட்டி ஒன்று கிடைத்தது. பெட்டியைத் திறந்ததும் அதில் சிலாதர் பேரொளி மயமான மான் மழுவேந்தி மதி குடியிருந்த முக்கண்ணன் திருவுருவையே கண்டார். அப்போது அசரீரி ஒன்று “ பெட்டியை மூடித்திற “ என்று கூற அவரும் அவ்வாறே பெட்டியை மூடித்திறந்து பார்த்தார். அதனுள் அருள் ஒளி நிறைந்த ஒரு ஆண் குழந்தை இருக்கக்கண்டார். நந்தி என்று பெயர் சூட்டி அக்குழந்தையை வளர்த்து வந்தார்.
குழந்தைக்கு வயது 7ஆனபோது ஆசிரமத்திற்கு வருகை தந்த மித்ரர், வருணர் ஆகிய இரு தேவர்களும் சிலாத முனிவரிடம் “ முனிவரே பார்த்து உங்கள் மகனுக்கு ஆயுட்காலங்கள் எட்டு ஆண்டுகள்தான் “ என்று கூறி மறைந்தனர்.
இதைக் கேட்ட நந்தி சிலாதரைப் பார்த்து “ தந்தையே நீங்கள் கவலைப்படாதீர்கள். காலகாலமான சர்வேஸ்வரன் திருவருளால் நான் நீண்டகாலம் வாழ்ந்திருப்பேன் எனக்கு தவம் புரியஅனுமதி கொடுங்கள் “ என்று கேட்டு தந்தையின் வாழ்த்தைப் பெற்று மரணமில்லா பெருவாழ்வு வாழ கடுந்தவம் இயற்றத் தொடங்கினார்.
நந்திதேவர் சூரிய புஷ்கரணியில் கழுத்தளவு ஆழத்தில் நின்று கொண்டு கைகளிரண்டையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்ட வண்ணம் ஒரு முறைக்கு ஒரு கோடி ஜபம் வீதம் 8 கோடி ஜெபம் செய்து முடித்து அளவில்லாத வாழ்நாளைப் பெற்றதுடன் கைலையிலேயே சிவத்தொண்டு செய்யும் காவலனாக எந்நாளும் இருக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
வசிஷ்டரின் பேத்தி சுசையை திருமணம் செய்து நல்வாழ்க்கை வாழ்ந்தார்.
சிவன் கற்பித்த அகமிக் மற்றும் தாந்த்ரீக ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதி தெய்வத்திடமிருந்து நந்தி பெற்றார்.
பிரோதஷ காலத்தில் சிவன் ஆலாகால விஷத்தை உண்டதால் மயங்கிய நிலையில் இருந்தபோது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.கருடன் சிவதரிசனம் செய்ய வந்து அனுமதிக்காமல் இருந்ததால் விஷ்ணு வந்து சிவனிடம் கருடனை மண்ணிக்க வேண்டினார்.
பிரதோச காலங்களில் நந்தியை தரிசிக்க சகல காரியங்கள் நிறைவேறும்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment